'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக "டாய்லெட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார், பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்க, ஸ்ரீ நாராயண் சிங் இயக்கியுள்ளார். கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு உத்திர பிரேதசம் மாநிலம் வரி விலக்கு அளித்திருக்கிறது. சமீபத்தில் உ.பி., சென்றிருந்த அக்ஷ்ய் குமார், முதல்வர் யோகி ஆதித்யா நாத்தை சந்தித்து பேசினார். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.