பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறிவிட்டார், அதற்கான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தனியார் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தன. அதேசமயம், அந்த சர்ச்சையே நிகழ்ச்சிக்கு டிஆர்பி.,-யை அதிகரிக்கவும் செய்தது. அதிலும் போட்டியில் பங்கேற்றுள்ள ஓவியாவிற்கு ஏக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்துவிட்டனர்.
ஆனால், கடந்த சில தினங்களாக ஓவியா - ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார்.
இந்தசூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதோடு நேற்றைய நிகழ்ச்சியில் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நிகழ்ந்தது. இதையடுத்து அவர் கவுன்சிலிங்கிற்காக பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. ஓவியாவிற்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள ரசிகர்களும் மிக ஆவலாய் இருந்தனர். இதனால் டுவிட்டரில் ஓவியா இந்தியா அளவில் டிரெண்ட்டானார்.
இந்நிலையில் விஜய் டிவி சார்பில் டுவிட்டரில் ஒரு போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓவியா, கமலுடன் அமர்ந்து கலந்துரையாடுவது போன்று இருக்கிறது. பொதுவாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை கமல் அழைத்து பேசுவார். இப்போது அதைப்போன்று கமல் ஓவியாவை அழைத்து பேசி இருக்கிறார். இதன்மூலம் ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பது உறுதியாகிறது.
ஓவியா இந்த வாரம் எவிக்சன் லிஸ்ட்டில் இருக்கிறார். நிச்சயம் ஓட்டு அடிப்படையில் ஓவியா வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார். ஆனால் அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து தானாகவே வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் ஓவியா இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டாது என்பது நிகழ்ச்சியை நடத்தும் சேனலுக்கும் தெரியும் ஆகையால் அவரை சமாதானம் செய்து மீண்டும் போட்டியில் பங்கேற்க வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதற்கிடையே ஓவியா போட்டியை விட்டு வெளியேறினால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கையே உருவாக்கி டிரெண்ட்டிங்கில் கொண்டு வந்தனர் அவரது ரசிகர்கள்.