தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷங்கர் இயக்கத்தில், அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் முதல்வன். அரசியல் பின்னணயில் உருவான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதல்வன் படத்தின் கதையை ரஜினிக்காகத்தான் ஷங்கர் எழுதியிருந்தார். அப்போதைய அரசியல் சூழல் காரணமாக அந்த கதையில் நடிக்க ரஜினி மறுக்கவே அர்ஜூன் நடித்தார்.
இந்நிலையில் தற்போது முதல்வன் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகி வருகிறது. இதை பாகுபலி, பாகுபலி-2, மெர்சல் படங்களுக்கு கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார். இப்படத்தில் ரஜினி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்பு முதல்வன் அரசியல் கதையில் நடிக்க மறுத்த ரஜினி, இப்போது இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள புதிய கதையில் நடிக்க சம்மதம் சொல்வார் என தெரிகிறது.