ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீண்டஇடைவெளிக்கு பிறகு நடிகை பத்மப்ரியா, தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். "தவமாய் தவமிருந்து" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. தொடர்ந்து பட்டியல், சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த அவர், திடீரென தமிழ் சினிமாவை விட்டே காணமல் போனார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த பத்மப்ரியா இப்போது மீண்டும் தமிழ்படத்தில் நடிக்கிறார். கற்றது தமிழ் படத்தை இயக்கிய டைரக்டர் ராம், அடுத்து தங்கமீன்கள் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகை பத்மப்ரியா நடிக்கவுள்ளார். இந்தபடத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் ராம் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து பத்மப்ரியா கூறுகையில், ராம் என்னுடைய நல்ல நண்பர். பலமுறை என்னிடம் இப்படத்தின் கதை பற்றியும், அதில் என்னை நடிக்க சொல்லியும் கேட்டு இருந்தார். ஆனால் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால், என்னால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் ராம் என்னை மீண்டும் சந்தித்தார். அப்போதும் இந்த கதை குறித்து பேசினார். மற்ற படங்களின் வேலை முடிந்துவிட்டதால் நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.