'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கதிர், சிருஷ்டி டாங்கே நடிக்கும் புதிய படம் சத்ரு. போங்கு படத்தை தயாரித்த ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு தயாராகிறது. ஒவ்வொரு ரசிகனுக்கும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும். வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் கதிரின் உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான கதாபாத்திரம். மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு. முதல் முறையாக போலீஸ் வேடம் ஏன்கிற நடிகர்களுக்கு அந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும் என்பது சினிமா பார்முலா. அந்த பிரகாசம் கதிருக்கும் உண்டு.
தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் சத்ரு. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடை பெற்றுள்ளது. என்கிறார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டான்.