மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் சமாளித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஓவியா, ஓவியா ஆர்மி என்ற தனி படையே உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஓவியா - ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு ஏகோபித்த அதரவு இருந்து வருகிறது.
இந்தச்சூழலில் ஓவியாவிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக போலீஸாரும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு என்ன ஆனது என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது. சமூகவலைதளங்களில் மீண்டும் ஓவியா பற்றிய பேச்சாகவே இருக்கிறது.