'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த சில படங்கள் ஹிட்டாகிவிட்டதால் இப்போது அங்கேயே தங்கிவிட்டார்.
இதுநாள் வரை மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்த டாப்சி, இப்போது சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டார். மும்பையின், அந்தேரி பகுதியில் 3 பெட்ரூம் கொண்டு அடுக்குமாடி வீட்டை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது... "எனது பிறந்தநாளுக்குள் மும்பையில் சொந்தமாக கார், வீடு வாங்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருந்தேன். சில மாதங்களுக்குள் முன்பு கார் வாங்கிவிட்டேன், இப்போது வீடு வாங்கிவிட்டேன். நான் நினைத்தது எனது பிறந்தநாளுக்கு முன்பே நிறைவேறிவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி. தற்போது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் என் சகோதரியுடன் அந்த வீட்டில் குடியேற போகிறேன்" என்று கூறியுள்ளார்.