'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சம்பள பிரச்னையால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் ஆக., 1 முதல் பணிக்கு செல்லவில்லை. காலா, மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் படப்பிடிப்பு முடங்கியது.
ரஜினி, கமல் கோரிக்கையை ஏற்று, பெப்சி தொழிலாளர்கள், இன்று முதல் பணிக்கு செல்ல உள்ளதாக, பெப்சி தலைவர் செல்வமணி தெரிவித்தார். இதனிடையே பெப்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளம் மற்றும் பொதுவிதி உள்ளிட்ட பிரச்னை குறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து தொழிலாளர் நலவாரிய இணை ஆணையர் ரவிசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. பெப்சி சார்பில் அதன் தலைவர் ஆர்கே செல்வமணி, செயலாளர் சண்முகம், பொருளாளர் சண்முகமும், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் பிரகாஷ் ராஜ், செயலாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா மற்றும் எஸ்வி சேகர் ஆகியோரும் பங்கேற்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
சென்னையில் பெப்சி தொழிலாளர்களின் பிரச்னை குறித்து முதற்கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தொழிலாளர் நல வாரிய இணை ஆணையர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெப்சி சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது: திரைப்பட துறையை காக்க பெப்சி உதவும். திரைப்படத்துறை ஆரோக்கியமாக வைத்திருக்க பெப்சி அனைத்து உதவிகளையும் செய்யும். பெப்சியில் இல்லாத தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக உள்ளது. பெப்சி சார்பில் எந்த வேலை நிறுத்தமும் நடைபெறாது.ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவேண்டும் குறைவாகவோ கூடுதலாகவோ வழங்கினால் பெற மாட்டோம் என கூறினார்.
தொடர்ந்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:
ஊதியம் பற்றிய முறை காலம்காலமாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்றக்கொள்ள முடியாது என தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பிரகாஷ்ராஜ் கூறினார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு தயாரிப்பாளர் தான் எடுக்கும் படத்தில் எத்தனை தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என முடிவு செய்வது அவரது உரிமை .ஒரு தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை அல்ல. தயாரிப்பாளர்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக போராடுகிறோம் என கூறினார்.