இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் யூத் ஐகான் ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் மலையாள சினிமாவின் யூத் ஐகான் பட்டத்தை வென்றிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
கடந்த ஒரு வருடத்தில் பிருத்விராஜின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் தோன்றும் விதம், சமூக விஷயங்களில் அவர்களது அக்கறை என இதுபோன்ற சில விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கான விருது வழங்கும் விழாவை கேரள அரசு நடத்தியது.
இதில் விருதுபெற்ற பிருத்விராஜ் பேசும்போது, “பொதுவாக பலரும் சினிமாவை சினிமாவாக பாருங்கள். கலையை கலையாக பாருங்கள் என சொல்வார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை பெண்களை அவமதிக்கும் விதமான கதைகளிலும் காட்சிகளிலும் இனி நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை என்பதும் எனக்கு தெரியும்.
இருந்தாலும் இது சமூக மாற்றத்திற்கு சினிமா துறையில் இருந்து என்னுடைய முதல் அடியாக இருக்கட்டுமே என நான் எடுத்து வைத்துள்ளேன். குறைந்த பட்சம் ஒரு கலைஞனாக என்னால் இதை செய்ய முடியும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
பிருத்விராஜின் கருத்துக்கு பெண்கள் மத்தியில் பாராட்டும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.