ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக மிகப்பெரிய பரபரப்பு அரங்கேறி வருகிறது. சந்தேகப்படும் நட்சத்திரங்களை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கலால் துறை அதிகாரிகள் நடிகர் ராணாவின் தந்தைக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவுக்கு வந்து சோதனை மேற்கொண்ட விஷயம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இப்போதெல்லாம் சில பிரபலங்கள் ஆன்லைன் மூலமாகவே போதைப்பொருட்களை தங்களது வீட்டின் வாசலுக்கு வரவழைத்து வாங்கிக்கொள்கிறார்கள் என்பதால் அது போன்ற விஷயங்களை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர். அந்தவிதமாக சமீபத்தில் ராணாவுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காகவே ஸ்டுடியோவுக்கு வந்தார்களாம் அதிகாரிகள்.
ஸ்டுடியோவில் இருந்த ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ்பாபு அது ராணாவின் முதுகு வலிக்காக வரவழைக்கப்பட்ட மருந்து பார்சல் என கூறியுள்ளார். ஆனாலும் அதிகாரிகள் அந்த பார்சலை முழுவதுமாக பரிசோதித்ததோடு அல்லாமல் ஸ்டுடியோ முழுக்க சோதனையும் நடத்தினார்களாம். ராணாவின் தந்தை சொன்னது உண்மை என உணர்ந்த பின்னரே அங்கிருந்து கிளம்பி சென்றார்களாம். இந்த விஷயத்தில் ஏற்கனவே ராணாவின் பெயர் அடிபட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த சோதனை இன்னும் கொஞ்சம் பரபரப்பு தீனி போட்டுள்ளது.