ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பல கலைஞர்களுக்கு அடையாளமாக விளங்கிய சூப்பர் குட் நிறுவனத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஜீவா நடிகராக அறிமுகமாமன பின் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த 14 வருடங்களில் அவர் நடித்த படங்களில் “ராம், டிஷ்யூம், ஈ, சிவா மனசல சக்தி, கோ, நண்பன்” ஆகிய படங்களைத் தவிர மற்ற படங்கள் அவருக்குப் பேர் சொல்லும் படங்களாக அமையவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக விழுந்தவர்களும் கிடையாது, எழுந்து நின்றவர்களும் கிடையாது. வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். ஜீவாவைப் பொறுத்தவரையில் சில இயக்குனர்களை நம்பி ஏமாந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மிஷ்கின், கௌதம் மேனன், ரவி கே சந்திரன் போன்ற பிரபலங்கள் கூட ஜீவாவின் வெற்றியை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். அந்தப் பூட்டை இப்போது 'கீ' கொண்டு திறக்க வருகிறார் இயக்குனர் காளீஸ்.
ஜீவா தற்போது நடித்து வரும் 'கீ' படம் 'ஹேக்கர்ஸ்' பற்றிய படமாம். இணையதளங்களை விளையாட்டாக 'ஹேக்' செய்பவராக ஜீவா நடிக்கிறார். இது சம்பந்தமான பல விஷயங்களை ஜீவா தெரிந்து வைத்திருக்கிறார் என்கிறார் இயக்குனர் காளீஸ். இந்த 'கீ'யாவது ஜீவாவிற்கு வெற்றிக் கதைவைத் திறக்கட்டும்.