'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தெலுங்கு நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவின் 100வது படமான கவுதமி புத்ர சாதகர்ணி பெரும் வெற்றி பெற்றது. தற்போது பைசா வசூல் படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
நயன்தாரா ஏற்கெனவே என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக சிம்ஹா மற்றும் ஸ்ரீராமராஜ்யம் படங்களில் நடித்தார். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். அந்த சென்ட்டிமென்ட் அடிப்படையில் தனது 100-வது படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பாலகிருஷ்ணா முயற்சித்தார். ஆனால் ஏனோ அவர் நடிக்க மறுத்துவிட்டடார். இதனால் அந்த கேரக்டரில் ஸ்ரேயா நடித்தார்.
இப்போது 102வது படத்தில மூன்றாவது முறையாக என்.டி.பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. கே.எஸ்.ரவிகுமார் நயன்தாராவிடம் கதை சொல்லி இம்பரஸ் பண்ணியதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க நயன்தாராவுக்கு 4 கோடி சம்பளம் என்கிறார்கள். படத்தை கவுதமிபுத்த சாதகர்ணி படத்தை தயாரித்த கல்யாண் தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.