பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி நடித்து வரும் காலா படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார், தனுஷ் தயாரிக்கிறார். இது தமிழ் நாட்டில் இருந்து மும்பை சென்று தாதாவாக மாறிய ஒருவரின் கதை. இந்தக் கதை என்னுடையது என்று கூறி சென்னையை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் பா.ரஞ்சித், மற்றும் ரஜினி சார்பில் பதில் மது தாக்கல் செய்யப்பட்டது. "காலாவின் கதை எங்களது சொந்த கதை, யாரிடமிருந்தும் திருடவில்லை. மேலும் மனுதாரார் கரிகாலன் என்ற தலைப்பைத்தான் பதிவு செய்திருக்கிறார் எங்கள் படத்தின் பெயர் காலா. 160 கோடி ரூபாய் செலவில் படம் தயாராகிறது. அடுத்த ஆண்டு வெளியாகிறது. மனுதாரர் சொந்த விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
காலா படத்தின் கதை மனுதாரருக்குதான் சொந்தம் என்பதற்காக ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராஜசேகரன் ரஜினியை சந்தித்து கதை சொன்ன புகைப்படம் மற்றும் கதைக்கான சில ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வருகிற 8ந் தேதி மீண்டும் விசாரணை நடக்கும் என்று வழக்கை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.