மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜியின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகற்றப்பட்டு அடையாறில் கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. என்றாலும் கடற்கரையில் சிவாஜிக்கு சிலை வைப்போம் என்ற சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் நீதிமன்றத்தையும், அரசையும் மதிப்பவர்கள். அப்பா எங்களுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனால் அப்பா சிலை அகற்றம் பற்றி தவறாக எதுவும் சொல்ல மாட்டோம். அரசு மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மதிக்கிறோம்.
என்றாலும் நடிப்புக்கு பெருமை சேர்த்த சிவாஜியின் சிலை கடற்கரையில் அவர் தலைவராக ஏற்றுக் கொண்ட காமராஜர் சிலை அருகில் வைக்கப்பட வேண்டும் என்ற பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். எங்கள் குடும்பமும் அதையே விரும்புகிறது. எனவே சிவாஜி ரசிகர் மன்றம் மற்றும் எங்கள் குடும்பத்தின் சார்பில் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு நடுவில் சிவாஜிக்கும் சிலை வைக்க முயற்சிப்போம். சட்டபூர்வமாக அரசிடம் அனுமதி பெற்று இதைச் செய்வோம்.
இவ்வாறு பிரபுவும், ராம்குமாரும் கூறியிருக்கிறார்கள்.