டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமா விட அரசியல் சார்ந்த விஷயங்களை அதிகம் பேசி வருகிறார். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று அவர் சொன்ன ஒற்றை வார்த்தை அமைச்சர்கள் மற்றும் கமல் இடையே கடும் வார்த்தை போரை உருவாக்கியது.
தமிழக அரசு மீது தொடர்ந்து கமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சமீபத்தில் கூட பெரம்பலூரில் சத்துணவில் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் முட்டையில் நடக்கும் ஊழலை கண்டுபிடித்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.
இந்நிலையில் தற்போது கமல் நடிகர் சிவாஜியின் சிலை அகற்றம் குறித்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். அதில் அரசை எதிர்பார்க்காமல் சிவாஜிக்கு ஒரு சிலை செய்வோம் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் அரசுக்கும் அப்பால் என் அப்பா என கூறியுள்ளார்.