தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் துல்கர் சல்மான், மலையாள, மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர். இன்று, தமிழ், மலையாளம், தெலுங்கு என, புதுப்படங்களுக்கு, கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு, ரொம்ப பிசி. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவிருக்கும், சோலோ படம் பற்றியும், தன் திரை அனுபவங்கள் பற்றியும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் துல்கர் சல்மான்.
சோலோ படத்தின் ஸ்டில்களே மிரட்டலாக இருக்கின்றன. அது குறித்து?
நான் நடித்த படங்களிலேயே, ரொம்ப சவாலாக இருந்த படம் சோலோ. பிஜய் நம்பியார், இந்த படத்தை இயக்குகிறார். நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய, நான்கு விஷயங்களை மையமாக வைத்து, கதை தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு, மூன்று பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தன்சிகா, ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, ஆர்த்தி என, நான்கு ஹீரோயின்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட, மூன்று மொழிகளுக்கும், 11 பேர் இசை அமைத்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது, நான்கு படங்களில் நடித்ததற்கு சமம்.
தமிழில் அதிகம் நடிப்பது இல்லையே... ஏன்?
இப்போது என் கவனம் முழுவதும், மலையாளத்தில் தான் இருக்கிறது. தமிழில், நல்ல கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் கவனம் செலுத்தினால், மலையாளத்தில் கிடைத்த இடத்தை விட்டு விடுவேனோ என்ற பயம் இருக்கு.
ஓகே கண்மணி படத்துக்கு பின், தமிழ் ரசிகர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தனரே...
ஓகே கண்மணி படத்துக்கு பின், தமிழில், மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டாம் என, நினைத்தேன். ஆனால், காதல் கதைகள் தான் அதிகம் கிடைத்தன. இதனால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். என்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு, படம் போரடித்து விடக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறேன். அதனால் தான், யோசித்து முடிவு எடுக்கிறேன்.
தமிழ், மலையாள படங்களின் கதைகளுக்கு வித்தியாசம் உள்ளதா?
இரண்டு மொழி படங்களிலுமே, வலுவான கதைக்களம் இருக்கிறது. ரசிகர்கள், இப்போதெல்லாம், ரொம்ப செலக்டிவாக தான், படங்களை பார்க்கின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற கதைகள் இருந்தால் தான், படம் ஓடும். இரு மொழிகளிலுமே, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன.
அப்பா நடித்த படங்களின், ரீமேக்கில் நடிக்கும் ஆசை உள்ளதா?
அப்பாவுக்கென தயாரான கதைகளில் தான், அவர் நடித்தார். அந்த படங்களில் அவர் நடித்தால் தான், நன்றாக இருக்கும். அவர் நடித்தது போல், என்னால் நடிக்க முடியாது. நான், ஏதாவது புதிதாக செய்தால் தான், ரசிகர்களுக்கு பிடிக்கும். மற்றவர்கள் நடித்ததையே, நானும் நடித்தால், ரசிகர்களுக்கு பிடிக்காது.
தமிழ் நடிகர்களோடு சேர்ந்து நடிக்கும் ஆசை உள்ளதா?
எனக்கு, இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எல்லாருடனும் சேர்ந்து நடிக்க முடியும் என, நம்புகிறேன்.
உங்க குழந்தை பற்றி?
என் மகள் மரியமுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. விருந்தினர் போல், அவ்வப்போது வந்து செல்கிறேன். பெரும்பாலான நேரம், குடும்பத்தை பிரிந்து, வெளியூர்களில் தான் இருக்கிறேன்.
அடிக்கடி சென்னையில் பார்க்க முடிகிறதே?
சென்னையிலும், எங்களுக்கு வீடு இருக்கிறது. அதனால், அடிக்கடி வருகிறேன். சென்னையில் நான் படித்த பள்ளி மாணவர்களுடன், இந்த முறை, என் பிறந்த நாளை கொண்டாடினேன். சென்னை, எப்போதுமே எனக்கு பிடிக்கும்.
நடிகை சாவித்திரி கதையில், நீங்கள் ஜெமினி ரோலில் நடிப்பது பற்றி?