'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
வெளியில் எப்படிப்பட்ட பெரிய ஆளாக இருந்தாலும் எதோ ஒரு காரணத்தால் குற்றவாளியாக சிறைக்குள் செல்லும்போது, சிறைவாசம் அவர்களை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். சமீபத்தில் நடிகை விவகாரத்தில் சிக்கி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் மறுத்ததில் இருந்து அவர் மனதளவில் ரொம்பவே தளர்ந்துவிட்டாராம். சிறையில் இருக்கும் பெரும்பாலான நேரத்தில் அவர் வெளி உலகத்தையே ஏக்கத்துடன் பார்ப்பதை சிறை அதிகாரிகள் கவனித்து வந்தார்கள்..
திலீப் தற்போது இருக்கும் இருக்கும் நிலையில் அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என முடிவு செய்த அதிகாரிகள் அவரை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள செய்துள்ளார்கள். பொதுவாக சிறையில் இப்படி மன அழுத்தத்துடன் சோகத்துடன் இருக்கும் கைதிகளுக்கு கிறித்துவ தேவாலயங்களில் இருக்கும் சிஸ்டர்கள் மற்றும் பாதிரியார்கள் மூலமாக அவர்களது மன பாரங்களை இறக்கி வைத்து, அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர செய்யும் பணி அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் திலீப்பிற்கு இரண்டரை மணி நேர கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
இந்த கவுன்சிலிங்கின்போது திலீப் அவரது மனைவியான காவ்யா மாதவனும் எங்கே கைது செய்யப்பட்டு விடுவாரோ என்றும், அவரது மகள் மீனாட்சியின் தற்போதைய நிலை மற்றும் அவளது எதிர்காலம் குறித்தும் சதா கவலைப்படுவதும் தெரியவந்துள்ளது. அவரை சாந்தப்படுத்திய கவுன்சிலிங் நபர்கள், சிறைவாசம் என்பது நிரந்தரமான ஒன்று அல்ல என கூறி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்களாம். மேலும் தொடர்ந்து யோகா செய்வது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை மேற்கொள்ளும்படியும் கவுன்சிலிங் கொடுத்தார்களாம்.