ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது இவர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் "ஜப் ஹாரி மெட் செஜல்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தொடர்பாக புரொமோஷனில் இருந்த ஷாரூக், நமக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் விபரம் வருமாறு...
இந்தப்பட தலைப்பை ரன்பீர் தான் பரிந்துரை செய்தாராமே, உண்மையா...?
உண்மை தான். நிறைய படங்களின் தலைப்புகள் படப்பிடிப்புக்கு முன்பே முடிவாகிவிடுகின்றன. சில தலைப்புகள் படப்பிடிப்பு முடியும் தருவாயில் தான் முடிவாகின்றன. இந்தப்படத்திற்காக நாங்கள் நிறைய தலைப்பை தேர்வு செய்தோம். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது தான் ரன்பீர், ஜப் ஹாரி மெட் செஜல் தலைப்பை பரிந்துரை செய்தார். இந்த தலைப்பு எங்களுக்கும் பிடித்திருந்தது, அதையே முடிவு செய்துவிட்டோம்.
முதன்முறையாக இம்தியாஸ் அலியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்க?
இம்தியாஸ் அலி அற்புதமான இயக்குநர். இப்போது வரை அவர் பல படங்கள் இயக்கியிருந்தாலும் நான் அவரது முதல் படமான சோஜா நா தா என்ற படத்தை இப்போதும் ரசிப்பேன். அவரிடம் உள்ள சிறப்பே, கதை சொல்லும் ஸ்டைலும், அதை காட்சிப்படுத்தும் விதமும் தான். சாதாரணமாக இரண்டு பேர் பேசிக்கொள்வது போன்று கதையை அவ்வளவு அழகாக சொல்லி விடுவார். மேலும் அவரிடத்தில் உள்ள நேர்மை, எளிமையும் அனைவரையும் கவர்ந்துவிடும்.
அனுஷ்காவுடன் மூன்றாவது படம், அதுபற்றி சொல்லுங்க?
எனக்கு மிகவும் பிடித்த நடிகை அனுஷ்கா. அவரின் முதல்படமான ரப் நே பனா தி ஜோடி என்னுடன் தான் அமைந்தது. விடா முயற்சி உள்ள நடிகை. ஒவ்வொரு காட்சியையும் எப்படி வர வேண்டும் என்று பகிர்ந்து கொண்டு, அதை உள்வாங்கி கொண்டு அற்புதமாக நடிப்பவர். அவரின் முதல் படம் முதல் இப்போது வரை அவரிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
சல்மான், அமீர் படங்களோடு ஒப்பிடுகையில் உங்களின் சமீபத்திய படங்கள் வசூல் ரீதியாக குறைந்துள்ளது. இதனால் அவர்கள் மீது பொறாமை எதுவும் உள்ளதா?
நிச்சயமாக அவர்கள் மீது ஒருபோதும் பொறாமை கொள்ள மாட்டேன். நான் சினிமாவிற்கு அறிமுகமான புதிதில் இருந்து இருவரையும் பார்த்து வருகிறேன். இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள். அமீருடன் நிறைய முறை விளையாடியிருக்கிறேன். சல்மான் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் எனக்கு நல்ல நண்பர்களாக உள்ளனர். அதுமட்டுமல்ல இருவரும் என்னை விட சீனியர் நடிகர்கள், ஆகையால் அவர்களுடன் நான் போட்டி போடுகிறேன் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு விதமான ரசிகர்களும், வியாபாரமும் உள்ளது. என்னுடைய ரயீஸ் படம் தங்கல் படத்துடன் போட்டி போட முடியாது. அது வேற லெவல் படம். நானும் தங்கல் போன்ற படத்தில் நடிக்கும் போது என்னுடைய படமும் பெரிய அளவில் வியாபாரமாகும், பெரிய அளவில் வசூல் செய்யும்.
இன்னும் தேசிய விருது வாங்காதது ஏன்?
நான் நிறைய விருதுகள் வாங்கியிருந்தாலும் இன்னும் தேசிய விருது வாங்கவில்லை, அதை வாங்க வேண்டும் என்பது என் கனவு. நிச்சயம் ஒருநாள் நான் தேசிய விருதை வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டு முறை எனக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தது. ஆனால் ஏனோ கிடைக்கவில்லை. அப்போது எல்லாம் நான் திறமையான நடிகன் இல்லை என்று எண்ணியது உண்டு. இருந்தாலும் வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது.