டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு சினிமாவில் கடந்த சில வாரங்களாக போதை பொருள் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ரோனி என்பவரின் வீட்டில் கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர். அதோடு அவரையும் கைது செய்தனர். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால், ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் நான் கவனிக்க முடியாது. சமூகத்திற்கு எதிராக நான் ஒருபோதும் நிற்க மாட்டேன் என்று சொன்னார்.
மேலும், இந்த விவகாரத்தினால் தனது இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும் காஜல் அகர்வால், இனிமேல் தனக்கு மேனேஜரே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். ஒரேயொரு உதவியாளரை மட்டுமே நியமித்துள்ள அவர், படங்களுக்கான கதை கேட்பது, சம்பளம் பேசுவது போன்ற விசயங்களை தனது பெற்றோரின் உதவியுடன் தானே நிர்வாகித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.