பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2001ம் ஆண்டு சென்னை கடற்கரை சாலையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை சிவாஜி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். சிலையின் அருகில் சிம்சன் மணிக்கூண்டு, சுதந்திர பொன்விழா தூண் போன்றவை இருந்தும், சிவாஜி சிலையால் மட்டும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுநல வழக்கு தொரடப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசும் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சொன்னது. இதைத் தொடர்ந்து சிலையை அகற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் சிவாஜிக்கு அரசு மணிமண்டபம் கட்டி வருகிறது. இந்த சிலையை அங்கு வைக்கப்போகிறோம் என்று அரசு அறிவித்தது. கடற்கரையில் காமராஜர் முதல் கண்ணகி வரைக்கும் சிலை இருக்கும் போது ஒரு மகத்தான கலைஞனின் சிலை அந்த வரிசையில் இருக்கட்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும் சிலையை அகற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ராட்சத கிரேன் மூலம் சிவாஜி சிலை அகற்றப்பட்டு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு ஏராளமான சிவாஜி ரசிகர்கள் அங்கு கூடினாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்ணீர்வடித்தபடி சிவாஜி சிலை அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்.