ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு இல்லாவிட்டாலும் கூட இதில் சம்பந்தப்படாத ஒரு சில பிரபலங்கள் கூட சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். அதில் ஒருவர் தான் மலையாள சினிமாவின் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ்.
கடந்த ஜூன்-26ஆம் தேதி, நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டவர் அதில் தேவையில்லாமல் நடிகையின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அது அப்போதே சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. உடனே மன்னிப்பு கேட்டு அதை நீக்கியும் விட்டார் அஜூ வர்கீஸ். ஆனால் இது தொடர்பாக கிரீஷ்பாபு என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இதனால் அஜூ வர்கீஸ் கலமசேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் விசாரிக்கப்பட்டார்..
இந்தநிலையில் தற்போது சம்பந்தப்பட்ட நடிகை, காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லியிருப்பாரே தவிர அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவரும் என் நண்பர்தான் எனக்கூறி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் பரஸ்பர சமரசத்தில் இறங்கினாராம். ஆனாலும் அதற்கு நீதிமன்றம் உடன்படவில்லை என்றே தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தில் தன் மீதான எப்.ஐ.ஆரை முடித்துவைக்குமாறு அஜூ வர்கீஸ் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாம். போலீஸார் மூலம் தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றே சொல்லப்படுகிறது.