மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் சொந்த வாழ்க்கையின் சங்கட நிகழ்வுகள் அவர்களது படங்களை எந்தவிதத்தில் பாதிக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. சல்மான் கான் விஷயத்திலும், சஞ்சய் தத் விஷயத்திலும் இதுபோன்ற கணிப்புகள் தவறாக போயுள்ளன. அவர்கள் தவறு செய்தார்கள் என்கிற வழக்கிற்கு பின்னால் வெளியான அவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய நிகழ்வுகளை நாம் தான் பார்த்திருக்கிறோமே.. ஆனால் அந்த இருவரின் வழக்கு விஷயத்தில் இருந்து மாறுபட்டது மலையாள நடிகர் திலீப்பின் விவகாரம். நடிகை விவகாரத்தில் கைதாகி சமீபகாலமாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் படம் தற்போதைய சூழலில் ரிலீஸானால் அதற்கு மக்களிடம் எந்த விதமான வரவேற்பு இருக்கும் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது..
இதனாலேயே திலீப் நடிப்பில் தயாராகி கடந்த ஜூன் மாதமே வெளியாக வேண்டிய 'ராம்லீலா' படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது திலீப் சம்பந்தப்பட்டிருப்பது பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம் என்பதால், மக்கள் மனநிலை அவரது படங்களை எந்த விதத்தில் அணுகும் என்பதை கணிக்க முடியாமல் படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முலக்குப்பாடம் தவித்து வருகிறார்.
இந்தப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் இயக்குனர் அருண்கோபியோ, “நல்ல படத்தை எடுத்துள்ளோம்.. நல்லபடத்திற்கு மக்கள் ஆதரவு என்றுமே உண்டு.. இனி மக்கள் கையில் தான் எல்லாமே இருக்கிறது.. வேறு என்ன சொல்வது..?” என தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.