‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை விவகாரத்தில் திலீப் கைதுசெய்யப்பட்ட தினத்தில் இருந்தே அவரது மேனேஜர் அப்புண்ணி தலைமறைவாகி விட்டார். இந்த விஷயத்தில் நடிகர் திலீப்புக்கும் முதல் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கும் பாலமாக இருந்தவர் இந்த அப்புண்ணி தான் என போலீஸ் சந்தேகித்து வந்த நிலையில் அவரது தலைமறைவு அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு, போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்படவே, வேறு வழியின்றி நேற்று ஆலுவா போலீஸ் கிளப்பில் போலீஸ் முன் ஆஜரானார் அப்புண்ணி.
இதில் போலீஸ் அலுவலகத்துக்கு அவர் வந்த விதமும் அவரை படம் பிடித்து, கேள்விகளால் துளைப்பதற்காக காத்திருந்த மீடியாக்களின் கண்களில் அவர் மண்ணை தூவிய விதம் அப்படியே சினிமா பாணியில் இருந்ததுதான் ஆச்சர்யம் தருவதாக இருந்தது.. போலீஸ் அலுவலகத்துக்கு முதலில் காரில் வந்து இறங்கியது அவரது தம்பி ஷிபு.. இவர் ஒரு காலத்தில் மஞ்சு வாரியாருக்கு ட்ரைவராக இருந்தவர்.. பார்ப்பதற்கு அப்புண்ணி போலவே இவர் இருந்ததால் மீடியாக்கள் அவரை சூழ்ந்துகொண்ட வேளையில் பின்னாடியே இன்னொரு காரில் வந்த அப்புண்ணி, மீடியாக்களின் பார்வையில் படாமல் உள்ளே சென்றுவிட்டார்.. திலீப்புடன் சேர்ந்து சினிமா பாணியில் திட்டம் போடும் கலை அவரது மேனேஜருக்கும் வந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது..?