'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்திருக்கும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன. இதில் துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா, ஜேடி சக்ரவர்த்தி, ராதாரவி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சு இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் நேற்று தணிக்கைக்கு அனுப்பபட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படம் மக்களுக்கு எப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என்பதை கற்றுக் கொடுக்கிறது என்று கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராகேஷ் கூறியதாவது:
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம்.
சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை. அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்சார்.
நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்சார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.
படத்திற்கு சென்சார் யு/ஏ அல்லது ஏ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள். பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.
சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?
ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? . படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். என்கிறார் இயக்குனர் ராகேஷ்.