'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கு கடந்த ஒரு மாதமாக சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் வெளியில் உள்ள எல்லா முகங்களும் பாவனாவுக்கு ஆதரவாக இருந்துவிடுமா என்ன..? திலீப்பின் நட்புக்காக ஆளுங்கட்சியான கேரள முதல்வர் முதல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ வரை ஒரு சிலர் குரல் கொடுக்கவே செய்கிறார்கள்.
அந்தவிதமாக கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏவான பி.சி.ஜார்ஜ் என்பவர் திலீப்பிற்கு ஆதரவாக, பாவனா விவாகரத்தில் கருத்து கூறும்போது, நடப்பதெல்லாம் நாடகம் தான்.. பாதிக்கப்பட்ட நடிகை எப்படி இரண்டு நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்..? திலீப் ஒரு பாவப்பட்ட மனிதர்.. அவருடைய சொத்துக்கள் எல்லாம் அவர் கடின உழைப்பில் சம்பாதித்தது.. இந்த அரசு இதேபோல மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யுமா, அவர்களின் சொத்து விபரங்களை கண்காணிக்குமா என கேள்வி எழுபியுள்ளார்.
பாவனா பற்றி அவர் கூறிய கருத்து பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. பொதுவாக சமூக நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக ஒலிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான பாக்யலட்சுமி, இந்த விஷயத்திலும் எம்.எல்.ஏவுக்கு சூடாக பதிலடி கொடுத்துள்ளார்..
இதுபற்றி அவர் கூறுகையில், “மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு இப்படி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை.. இப்படி ஒரு நிகழ்வு ஒரு பெண்ணுக்கு நடந்துவிட்டால், அதன்பிறகு அவள் வெளியே எங்கும் போகாமல் வீட்டில் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு காலம் முழுவதும் அழுதுகொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமா..?
உங்கள் மகளுக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்ட நிகழ்வு நடந்திருந்தால் அவளை இப்படி வீட்டில் தான் அடைந்து கிடக்க வேண்டும் என்பீர்களா..? உங்கள் பேச்சு பாதிக்கப்பட்ட பெண்ணை காயப்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பது உங்களுக்கே தெரியவில்லையா..? மக்கள் உங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என கண்டனம் தெரிவித்துள்ளார் பாக்யலட்சுமி.