'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கட்டமராயுடு படத்தை அடுத்து திரி விக்ரம் இயக்கும் தனது 25வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் பவன் கல்யாண். இந்நிலையில், வருகிற அக்டோபர் மாதம் முதல் நான் அரசியலில் இறங்கி அதிக நேரத்தை மக்களுக்காக செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.
அதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் நான் அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன். அவ்வப்போது திரை படங்களில் நடித்தபோதும், மக்கள் பிரச்சினைக்கு முதலிடம் கொடுப்பேன். மேலும், ஜன சேனா கட்சி சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்திருக்கிறேன்.
மேலும், ஆந்திர அரசியலில் ஜாதி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நான் அந்த மாதிரி அழுக்கான அரசியல் பண்ண விரும்பவில்லை. சாதி, மதம் இல்லாத சமூக நோக்கத்தடன் எனது அரசியல் பயணம் தொடரும். அனைத்துதரப்பு மக்களுக்காகவும் நான் உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.