ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி மகனான துல்கர் சல்மானுக்கு சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே திருமணமாகிவிட்டது. உறவுக்கார பெண்ணான அமல் சூபியாவை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மரியம் என்று பெயர் சூட்டியுள்ளனர். முதன் முதலாக குழந்தை படம் வெளிவந்துள்ளது. துல்கர் சல்மானிடம் மகள் எப்படி இருக்கிறாள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்.
அவளுக்கு எல்லாமே அம்மாதான். நான் பிசியாக இருக்கிறேன். வீட்டுக்கே கெஸ்ட் அப்பீயரன்ஸ் அப்பாவாகத்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் தான் அப்பான்னு அவளுக்கு புரியறதுக்கே கொஞ்சம் நாள் ஆகும்னு நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் அவளுடன் செலவு செய்கிறேன். எனது திருமணம் ஒரு மகிழ்ச்சியான விஷயம். திருமணத்துக்கு பிறகு நானும், சூபியாவும் இன்னும் அதிகமாக காதலிக்கிறோம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்கிறோம். அதற்கு கடவுள் கொடுத்த பரிசு மரியம். என்றார் துல்கர்.