தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் பீல்குட் படங்களை இயக்குபவர் என பெயரெடுத்தவர் தான் இயக்குனர் அஞ்சலி மேனன்.. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட, அப்படி ஒரு படத்தை கொடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் கூட தனது புதிய படம் பற்றிய அறிவிப்பு எதையும் வெளியிடாமலேயே இருந்தார் அஞ்சலி மேனன்.. இதற்கிடையே கடந்த வருடம் பிரதாப் போத்தன் டைரக்சனில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு அஞ்சலி மேனன் கதை எழுதினார்.. ஆனால் பிரதாப் போத்தன் அந்தக்கதையில் தனக்கு திருப்தியில்லை என ஒரு சர்ச்சையை கிளற அத்துடன் அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது..
பின்னர், அதே கதையை துல்கர் சல்மானை வைத்து அஞ்சலி மேனனே இயக்குகிறார் என சொல்லப்பட்டது. கொஞ்சநாள் கழித்து, அவர் பிருத்விராஜ் படத்தைத்தான் இயக்குகிறார் என புதிய தகவல் வெளியானது. இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பிருத்விராஜ் படத்தில் நடிக்க, பார்ப்பதற்கு அவரைப்போலவே தோற்றமளிக்கும் 12-15 வயதிற்குட்பட்ட சிறுவன் தேவை என தனது முகநூலில் விளம்பரம் கொடுத்துள்ளார் அஞ்சலி மேனன்.
இதன்மூலம் அவர் பிருத்விராஜ் படத்தை இயக்குவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'மஞ்சாடிக்குறு' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அஞ்சலி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.