மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டவன் தான் ட்ரைவர் பல்சர் சுனில்.. இவனுக்கு பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய சொன்னது நடிகர் திலீப் தான் என்கிற புகாரின் பேரில் இப்போது பல்சர் சுனிலும் திலீப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. பல்சர் சுனிலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக வேலை பார்த்ததாக கூறி இருந்தான்..
சில தினங்களுக்கு முன் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீஸார், பல்சர் சுனில் கூறியது பற்றி விசாரிக்கையில், தனக்கு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும், அந்த நபர் சொல்வது பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் காவ்யா மாதவன். ஆனால் போலீஸார் காவ்யா மாதவனிடம் பல்சர் சுனில் வேலை செய்தானா, காவ்யா மாதவன் சொல்வது உண்மையா என்பதை உறுதிப்படுத்த காவ்யா மாதவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், அவரது அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனராம்.