பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அஜித்தின் மைத்துனியும், முன்னாள் நாயகி ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி, விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். எண்ணற்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதில், குறிப்பாக பெண்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தவர் ஷாமிலி. ஆனால், அவர் நாயகியாக அறிமுகமாக தேர்வு செய்த 'வீர சிவாஜி', அவருக்குத் தவறான தேர்வாக அமைந்து, படமும் படுதோல்வியடைந்தது. ஷாமிலியின் அறிமுகமும் ஒரு பதிவை ஏற்படுத்தாமலே போனது. அதற்குப் பிறகு அவரைத் தேடி எந்த வாய்ப்புகளும் வரவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க வந்த வாய்ப்பைத் தவறிவிடாமல் ஒப்பந்தமாகி விட்டார் ஷாமிலி. தெலுங்கில் பவன் சுந்தர் இயக்கத்தில் நாகசௌரியா நாயகனாக நடிக்கும் புதிய படத்தில்தான் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். ஷாமிலி தெலுங்கில்தான் முதன் முதலாக நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். 2009ம் ஆண்டில் 'ஓயே' என்ற படத்தின் மூலம்தான் அவர் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாராக ஓடினாலும், அதன் பின் அவர் தெலுங்கிலும் நடிக்கவில்லை. இப்போது 7 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் நாயகியாக பெரிய வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷாமிலி நாயகியாக வெற்றி பெறுவதில் ஏன் தடுமாறுகிறார் எனத் தெரியவில்லை.