ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விதி, கட்டுப்பாடு என நிமிடத்திற்கு நிமிடம் கூறி வந்த 'பிக் பாஸ்' இப்போது அவரது வசதிக்கேற்றபடி விதியை மீறியுள்ளார். ஆரம்பத்திலேயே அந்த விதி மீறல் நடந்தது. இருந்தாலும் நிகழ்ச்சி பற்றி அதிகம் தெரியாததால் யாரும் கண்டு கொள்ளவில்லை. 14 போட்டியாளர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு, பின்னர் 15வதாக ஒருவரை சேர்த்ததுதான் அந்த முதல் விதி மீறல். தொடர்ந்து பல தருணங்களில் பிக் பாஸ் நடத்தும் டாஸ்க்குகளில் பல ஒருதலைபட்சமான முடிவுகள் இருக்கிறது என நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்று சொன்ன கமல்ஹாசனே ஒரு சிலர் சார்பாக நடந்து கொள்கிறார் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.
100 நாட்களில் 35 நாட்களைக் கடந்து விட்ட நிலையில் நேற்று புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவியை களமிறக்கியிருக்கிறார்கள். 15 பேரில் ஏற்கெனவே 6 பேர் வெளியே போய்விட்ட நிலையில் புதிய போட்டியாளராக பிந்து மாதவி 'பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழைக்கப்பட என்ன காரணம் என பார்வையாளர்களுக்குக் கேள்வி எழுந்துள்ளது.
ஓவியாவிற்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பெயர் கிடைத்துள்ளதால், அவருக்குப் போட்டியாகவே பிந்து மாதவி களமிறக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். நேற்று வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கமல்ஹான், யார் உங்களுக்குப் போட்டியாக இருப்பார்கள் என கருதுகிறீர்கள் எனக் கேட்டதற்கு பிந்து மாதவியும், 'ஓவியா தான்' என்று பதிலளித்தார்.
ஏற்கெனவே ஓவியாவிற்கு எதிராக மற்ற அனைவரும் அணி திரண்டுள்ளதால், வீட்டிற்குள் புதிதாக நுழைந்துள்ள பிந்து மாதவியும் ஓவியாவிற்கு பிரச்சனையை ஏற்படுத்துவாரா, அல்லது ஓவியாவிற்கு ஆதரவாக இருந்து, காயத்ரி, சினேகன், சக்தி போல ஓவியாவுடன் கூட்டணி அமைத்து மற்றவர்களை எதிர்கொள்ளப் போகிறாரா என்பது இனிமேல் தெரிய வரும்.