இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் விஜய் மிகப்பெரிய உயரத்தில் இருந்தபோதும், வளர்ந்து வரும் நடிகர்களின் சிறப்பாக நடிக்கும் பட்சத்தில் அவர்களை மேடைகளிலேயே பெருமைப் படுத்தி வருகிறார். அந்தவகையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகர். சின்னச்சின்ன அசைவுகளை அழகாக வெளிப்படுத்துவார் என்று சொன்னார் விஜய். அதை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அதையடுத்து அந்த விழா முடிந்ததும் வீட்டிற்கு சென்றவர், முதல்வேளையாக தனது டவிட்டரில் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற இன்னொரு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பர்சன் ஆப் தி இயர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது அதே விழாவுக்கு வந்திருந்த விஜய்யைப் பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்ட போது, விஜய் சார் மிகப்பெரிய நடிகர். என்றாலும், நான் சிறப்பாக நடனமாடுவ தாகவும், குழந்தைகளை கவர்ந்து விட்டதாகவும் கூறியிருந்தார். அப்படி அவர் சொன்னது சந்தோசமாக இருந்து. அவருக்கு நான் என்றென்றைக்குமே நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றார் சிவகார்த்திகேயன்.