டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில நாட்களாக ஆந்திராவில், குறிப்பாக தெலுங்கு திரையுலகில் சுழன்றடிக்கும் போதைப்பொருள் மாபியா குறித்து தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடிகர் ரவி தேஜாவிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தனக்கும் போதை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறிய ரவி தேஜா, சமீபத்தில் தான் தனது தம்பியை விபத்தில் பறிகொடுத்து சோகத்தில் இருக்கும் எனக்கு இந்த போதைப்பொருள் விவகாரத்தில் பங்கு இருப்பதாக சொல்லப்படுவது வேதனையளிக்கிறது என கூறினாராம்.
ரவி தேஜாவின் மேக்கப்மேன், உதவியாளர், நீண்டகால நண்பர் என பல முகங்கள் கொண்ட பி.ஏ.ராஜூவிடமும் அதிகாரிகள் விசராணை நடத்தினார்கள். அதில் ராஜூ இதற்கு முன் கணக்கில் காட்டிய தனது வருமானத்தை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மூன்று வீடுகளை வாங்கும் அளவுக்கு உங்களுக்கு பணம் எப்படி வந்தது..? நீங்கள் ரவிதேஜாவின் பினாமியாக செயல்படுகிறீர்களா என துருவித்துருவி கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறினாராம் ராஜூ.
போலீஸாரை பொறுத்தவரை ரவிதேஜாவின் நடவடிக்கைகளை எல்லாம் சாவி கொடுத்தாற்போல் செயல்பட்ட வைப்பது எல்லாம் இந்த ராஜூ தான் என்பதால், இந்த போதைப்பொருள் விவகாரத்தில் கூட ரவிதேஜாவை விட, ராஜூவிடம் தான் உண்மைகளை கறக்கவேண்டி இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார்களாம்.