'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அரவிந்த்சாமி, ராம்சரண் தேஜாவை இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதையடுத்து மாதவன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில் தற்போது மணிரத்னத்தின் புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்கயிருப்பதாக இன்னொரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. மணிரத்னம் அழைத்ததும் உடனடியாக அவருக்கு விஜய் சேதுபதி கால்சீட் கொடுத்து விட்டதாகவும், இதற்காக தான் ஏற்கனவே ஓகே பண்ணி வைத்திருந்த சில படங்களின் கால்ஷீட்டையும் கூட மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
அரவிந்த்சாமி, மாதவன், விஜய்சேதுபதி... இந்த மூவரில் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவது யார்? என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.