பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலகலப்பு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார் லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்தார். நடுத்தர குடும்பத்து கதைகளில் வரும் ஹீரோக்களுக்கு நண்பனாக காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
கருணாகரன் இப்போது அடுத்த தளத்துக்கு சென்றிருக்கிறார். இதுவரை அவருக்கு இருந்து வந்த அந்த அப்பாவி நண்பன் இமேஜை உடைக்கிற மாதிரி அஜித்துடன் விவேகம் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் அஜித்துக்கு உதவும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கொஞ்சம் காமெடியும், நிறைய சீரியசும் கலந்த கேரக்டர். பல்கேரியாவில் நடந்த படப்பிடிப்பில் அஜித்துடன் நடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாது:
அஜித்துடன் நடித்தது எனக்கு வாழ்நாள் சந்தோஷம். இயக்குனர் சிவா என்னை அழைத்து நீங்கள் ஒரு முக்கியமான கேரக்டரில் அஜித்துடன் நடிக்கிறீர்கள், பல்கேரியாவுக்கு கிளம்பி வாருங்கள் என்று சொன்னபோது இது கனவா நனவா என்றுதான் இருந்தது. அஜித்துடன் நடித்தபோது நான் கொஞ்சம் பயந்தேன். அவர் தான் என்னிடம் பல நாள் பழகிய நண்பன் போன்று பழகி பயத்தை போக்கி நடிக்க உதவினார். இயக்குனர் சிவாவும், அஜித்தும் சேர்ந்து என் தோற்றத்தையே மாற்றினார்கள். என்னை பார்க்க எனக்கே பிரமிப்பாக இருந்தது.
அஜித்துடன் நடிக்கும் காட்சியல் ஒரு நீளமான வசனத்தை நான் அவரை பார்த்து பேச வேண்டும். ஆனால் பயத்தில் எனக்கு உதறல் எடுத்தது, பல டேக் வாங்கினேன். ஆனால் அஜித் "நிறைய நேரம் எடுத்துக் கொண்டு பிராக்டீஸ் செய்யுங்கள்" என்று கூறி அந்த பிராக்டீசில் அவரும் என்னுடன் கலந்து கொண்டு ஒத்திகை பார்த்தார். ஒரு பெரிய ஹீரோ அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அஜித் செய்தார். படத்தின் பல்கேரிய எபிசோட் முழுவதும் நான் அவருடன் நடித்திருக்கிறேன். என் கேரியரில் விவேகம் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.