தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நெல்லை மாவட்டம் தனியார் பாலிடெக்னிக்கில் படிக்கும் 50 மாணவர்கள் இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் முதலீடு செய்து நெடுநல்வாடை என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இது ஒரு விவசாயியின் கதை. இதில் 70 வயது விவசாயியாக பூ ராமு நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம்கோபி, ஜந்து கோவிலான், செந்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்ளின் இசை அமைக்கிறார். செல்வகண்ணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்தான் "நெடுநல்வாடை".
நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. கிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இடம்பெறும். படத்தின் கதை பிடித்து வைரமுத்து இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிக்கொடுத்தது கூடுதல் பலம். படத்துக்கு தயாரிப்பாளர்கள் இல்லாமல் அலைந்தேன். என் கதையை கேட்ட எனது சக மாணவர்கள் தயாரிக்க முன்வந்தார்கள். படத்தை எடுத்து முடித்து விட்டோம். அடுத்த மாதம் வெளிவருகிறது. என்றார்.