தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒருபக்கம் 'பிக்பாஸ்', இன்னொருபக்கம் டுவிட்டரில் அரசியல் கருத்துக்கள் என ஒட்டுமொத்த ஊடகங்களையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் கமல். இதன் காரணமாக, தமிழகத்தையே தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க வைத்திருக்கிறார். இதற்கிடையில், விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட 'சபாஷ் நாயுடு' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார் கமல்.
அதோடு, இன்னொரு பக்கம் 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' படத்தையும் விரைவில் துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளார் கமல்.
'தலைவன் இருக்கிறான்' படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. அப்படி மாற்றம் செய்வதன் மூலம் 'தலைவன் இருக்கிறான்' படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.