அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
மலையாள நடிகர் திலீப் கைதானதும் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துபோனதென்னவோ உண்மை தான். அதனால் தான் மம்முட்டி, மோகன்லால் உட்பட சீனியர் நடிகர்கள் கூட, நடிகர் சங்க பொதுக்குழு என்கிற பெயரில் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டும் நின்றுவிட்டார்கள்.. திலீப்புக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.. ஒருசில சிறிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மட்டுமே தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
அந்தவகையில் திலீப் விவகாரம் குறித்து, பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் தற்போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், “இப்படியெல்லாம் செய்தால் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாத அளவுக்கு திலீப் ஒன்றும் முட்டாள் அல்ல. அவருடன் பழகிய காலத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்” என கூறியவர், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து அதிகம் பேச மறுத்துவிட்டார்.