கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு மற்ற ஹீரோக்களிலிருந்து 3 விதங்களில் வித்தியாசமானவர். ஒன்று அவர் தேசப்பற்று மிக்கவர். தேசப்பற்றை வலியுறுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். மற்றொன்று ஆக்ஷன் ஹீரோ. இன்றைக்கு இருக்கிற நவீன வசதிகள் இல்லாத காலத்திலேயே சண்டை காட்சிகளில் பிரமிப்பு காட்டியவர். அடுத்து அவர் அதிகம் நடித்திருப்பது போலீஸ் கேரக்டர்களில்தான். சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆன பிறகும் இன்னும் அதே உடல்கட்டுடன் ஆக்ஷனில் தெறிக்க விட்டிருக்கும் அவரது 150வது படமான நிபுணன் இன்று ரிலீஸ். இதுபற்றி அர்ஜுன் கூறியதாவது:
32 வருடங்களை திரும்பி பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நான் நடித்த படங்களை நினைத்து பார்க்கும்போது தவறான படங்கள் எதுவும் பண்ணவில்லை என்ற திருப்தி இருக்கிறது. இந்த வயதிலும் என் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு காரணம் அதீத ஆஞ்சநேயர் பக்தி. கடுமையான உடற்பயிற்சி, கட்டுப்பாடன உணவு இவைகள்தான்.
எனது சினிமா வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து வெற்றிகளை கண்டவன் நான். இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து நிபுணன் மிகவும் வித்தியாசமானது. அதன் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமானது. இது ஒரு சராசரி போலீஸ் திரில்லர் கிடையாது. முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இக்கதை கூறப்பட்டுள்ளது.
புலனாய்வு துறை அதிகாரியாக இதில் நடித்துள்ளேன். உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்திற்கு எல்லோரை போலவும் தனக்கென ஓர் பலவீனமும் இருப்பது ஒரு சுவாரஸ்யம். தனது தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் எவ்வாறு சமநிலை செய்கிறார் இந்த போலீஸ் அதிகாரி என்பதை படம் பார்க்கும் எல்லோரும் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வகையில் மிக திறமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். எங்கள் அணியின் கடுமையான உழைப்பினால் வெற்றியின் வாசலை வந்தடைந்துவிட்டோம் என நம்புகிறேன். என்கிறார் அர்ஜுன்.