இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழில் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ராமேஸ்வரம் பேய்கருப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்தில் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த 95 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவரது சிலிக்கான் சிலையையும் ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்துள்ளார்.
இந்த பணியில் 15 பேர் கொண்ட குழுவினார் 4 மாதங்கள் உழைத்து இந்த ஓவியங்களையும் சிலைகளையும் உருவாக்கி உள்ளனர். நேற்று மணிமண்டபத்தை திறந்த வைத்த பிரதமர் நரேந்திர மோடி ஓவியத்தையும், ஏ.பி.ஸ்ரீதர் குழுவினரையும் பாராட்டினார். அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயரும் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டியுள்ளார்.
"இந்தியாவின் தலைசிறந்த மனிதர் அப்துல் கலாம் அய்யா அவரை பலமுறை சந்தித்து ஓவியங்கள் பரிசளித்துள்ளேன். அவரது ஓவியம் ஒன்றை வரைந்து பரிசளித்தபோது மிகவும் மகிழ்ந்து போனார். அவரது நினைவிடத்தில் அவரது ஓவியத்தை வரைய கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.