பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தமிழில் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ராமேஸ்வரம் பேய்கருப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்தில் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த 95 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவரது சிலிக்கான் சிலையையும் ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்துள்ளார்.
இந்த பணியில் 15 பேர் கொண்ட குழுவினார் 4 மாதங்கள் உழைத்து இந்த ஓவியங்களையும் சிலைகளையும் உருவாக்கி உள்ளனர். நேற்று மணிமண்டபத்தை திறந்த வைத்த பிரதமர் நரேந்திர மோடி ஓவியத்தையும், ஏ.பி.ஸ்ரீதர் குழுவினரையும் பாராட்டினார். அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயரும் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டியுள்ளார்.
"இந்தியாவின் தலைசிறந்த மனிதர் அப்துல் கலாம் அய்யா அவரை பலமுறை சந்தித்து ஓவியங்கள் பரிசளித்துள்ளேன். அவரது ஓவியம் ஒன்றை வரைந்து பரிசளித்தபோது மிகவும் மகிழ்ந்து போனார். அவரது நினைவிடத்தில் அவரது ஓவியத்தை வரைய கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்" என்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.