ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில், நடிகையின் டிரைவர் மார்ட்டின் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலரும் போலீஸ் விசாரணை வளைத்திற்குள் வந்துள்ளனர். திலீபின் மனைவியும், முன்னணி நடிகையுமான காவ்யா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பிரபல மலையாள சினிமா பாடகி ரிமி டோமியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரிமி டோமியிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. நடிகை கடத்தப்பட்ட அன்று ரிமி டோமி, திலீபிடமும், காவ்யா மாதவனிடமும் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். எனவே கடத்தலில் பாடகிக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பாடகி ரிமி டோமி திலீப், காவ்யா மாதவன் ஆகியோரின் நெருங்கிய தோழி. இருவருக்கும் இடையே தூதராக இருந்து இருவரின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் காரணமாக இருந்தவர் ரிமி என்றும். வெளிநாட்டு பணயங்களில் திலீபுக்கும், காவ்யா மாதவனுக்கும் பயண ஏற்பாடுகளை செய்பவராகவும் ரிமி இருந்துள்ளார் என்கிறார்கள்.
இதுகுறித்து ரிமி கூறும்போது "போலீசார் என்னை போனில்தான் விசாரித்தார்கள். நான் அதற்கு சரியான பதில்களை கூறியுள்ளேன். திலீபுக்கும் எனக்கும் எந்தவித வியாபார தொடர்பும் கிடையாது. அவர் கலந்து கொண்ட வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். நடிகை கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார் ரிமி.