கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு தமிழ் சேனல்களில் நம்பர் ஒண் நிகழ்ச்சி. தினமும் 2 கோடி பேரும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக சொல்கிறார்கள். 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.
கோடிக் கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தபோதும் நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. நாடு இருக்கிற நிலைக்கு இந்த மாதிரி நிகழ்ச்சி தேவையா? என்றும் கலாச்சார சீரழிவை விதைக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதே கான்செப்ட்டில் ஒரு விவசாய நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலத்தை சுற்றி உயரமாக தடுப்பு அமைக்கிறார்கள். அதற்குள் சில குடிசைகள் ஒரு பம்பு செட்டு, கயிற்று கட்டில் போடுகிறார்கள். படித்த இளைஞர்கள், பெண்கள் 14 பேர் சீர்படுத்தப்பட்ட இந்த வயலில் நாற்று நடுவதில் தொடங்கி கதிர் அறுவடை செய்யும்வரை அங்கு தங்கிருக்க வேண்டும். அவர்களே நாற்றுநடுவது, களைபறிப்பது, உரமிடுவது, நீர் பாய்ச்சுவது என்று அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். யார் கடைசி வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட்.
காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலத்தில் தடுப்பு மற்றும் குடிசைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 கேமராக்கள் கொண்டு இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிறார்கள். விவசாயம் பற்றி நன்கு அறிந்த ஒரு திரைப்படக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்துகிறார். தற்போது இதற்கான ஆட்கள் தேர்வும் நடக்கிறது. ஒரு சில நடிகர்களும் இதில் இடம்பெறுகிறார்களாம். நம்ம மூவீஸ் சார்பில் ஆர்கே தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்குகிறார். மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.