கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட துல்கர்சல்மானுக்கு இன்று பிறந்தநாள்.. மலையாளத்தில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இன்று அவருக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ உருவாகும் விதமாக இந்த ஐந்து வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது. தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் துல்கருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதும் உண்மை..
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிப்பதன் மூலம் நேரடியாக தெலுங்கில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, மலையாளம், இந்தி, தமிழ் என மும்மொழிகளில் உருவாகும் 'சோலோ' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதுதவிர நேரடி தமிழ்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.
ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அம்சங்கள் இருந்தாலும், தான் எந்த கேரக்டரிலும், எந்த கதையிலும் பொருந்துவேன் என சொல்லும் விதமாக வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான். தனது திரையுலக பயணத்தில் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்க துல்கருக்கு நம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.