பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பெப்சி தொழிலாளர்கள் தன்னிச்சையாக ஆங்காங்கே படப்பிடிப்புகளுக்கு தடை செய்தது தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோபத்தை தூண்டியது. இதனால் இனி தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதற்கு பதில் அளித்த பெப்சி எங்கள் சம்பளத்தை குறைக்க நினைக்கிறவர்கள் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறையுங்கள் என்றது. இதனால் இன்னும் கோபம் அடைந்த தயாரிப்பாளர் சங்கம். பெப்சி தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகளை விதித்துள்ளது. இது தொடர்பாக சங்கம் தயாரிப்பாளருக்கு அனுப்பி உள்ள சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விதிகள் வருமாறு:
* தங்களுக்கு தேவையான பணியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. படப்பிடிப்பை நிறுத்த தயாரிப்பாளர் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
* சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் வரை நடக்கும் படப்பிடிப்புகளுக்கு இனி பயணப்படி கிடையாது. அதை தாண்டிய தூரத்திற்கு இனி தூரத்தை கணக்கிடாமல் நேரத்தை கணக்கிட்டே சம்பளம் வழங்கப்படும்.
* அனைத்து பணியாளர்களுக்கும் 12 மணி நேரத்திற்கு அரை பேட்டாவும், 24 மணி நேரத்திற்கு முழு பேட்டாவும் வழங்கப்படும். இந்த நேர கணக்கீடு படப்பிடிப்புக்கு புறப்படுகிற நேரத்தை வைத்து கணக்கிடப்படும். வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு நேரம் கணக்கிடப்படாமல் பேட்டா வழங்கப்படும். சனிக்கிழமை இரவு 2 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடந்தாலோ ஞாயிற்றுக்கிழமை நடந்தாலோ அரை பேட்டா கூடுதலாக வழங்கப்படும்.
* பல மாடி கட்டிடத்தில் படப்பிடிப்பு நடந்தால் 5 மாடிக்கு மேல் 100 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இது கேமரா உதவியாளர், லைட் மேன், கிரேன்மேன்களுக்கு மட்டும்தான்.
ஆசியா கண்டத்தில் படப்பிடிப்பு என்றால் ஒண்ணறை பேட்டாவும், மற்ற நாடுகளில் நடந்தால் 2 பேட்டாவும், இரண்டு மொழி படமாக இருந்தால் ஒரு பேட்டாவும் ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டால் ஒண்ணறை பேட்டாவும் வழங்கப்படும்.
* வெளியூர் படப்பிடிப்புக்கு எத்தனை பேர் வேண்டும் என்பதை தயாரிப்பாளரே முடிவு செய்வார். அவர்களுக்கு உணவு வழங்க தக்க பணியாளரை தயாரிப்பாளரே நிர்ணயம் செய்து கொள்வார்.
மேக்அப் மேன் மற்றும் அவரது உதவியாளருக்கு காண்டிராக்ட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். மேக்அப் மேன்கள் படப்பிடிப்பு தொடங்கும் 2 மணிநேரத்திற்கு முன்னதாக பணிக்கு வரவேண்டும். நடிகர், நடிகைகள் தனி மேக்அப்மேன் வைத்திருந்தால் கம்பெனி மேக்அப் மேன் வைத்துக் கொள்ளாது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மேக்அப் மேனை வைத்துக் கொள்ள தயாரிப்பாளருக்கு முழு உரிமை உண்டு. இதே விதிமுறைகள் ஆடை அலங்கார நிபுணர்களுக்கும் பொருந்தும்.
* ஒரு கேமராவுக்கு 3 உதவியாளர்கள் போதும், இரண்டாவது கேமராவுக்கு 2 உதவியாளர்கள் போதும்.
* படப்பிடிப்புக்கு தேவையான வாகனங்களை வைத்துக் கொள்ள தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. 70 சதவிகித வாகனங்கள் தயாரிப்பாளருடையதாகவும் 30 சதவிகித வாகனங்கள் சங்கத்தினுடையதாகவும் இருக்கும்.
* நடன கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் குலுமனாலி, ராஜஸ்தான் பகுதியில் பணிபுரிந்தால் பேட்டாவோ, டிராவல் அலவன்சோ கிடையாது. விபத்து நடந்தால் தங்களின் மெடிக்கல் இன்சூரன்சை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தயாரிப்பாளரிடம் எந்த பணமும் கேட்கக்கூடாது.
இப்படி பல கடுமையான விதிமுறைகளை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.