புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
மலையாளத்தில் கும்பாசரம் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து விட்டு துருவங்கள் பதினாறு படத்தில் நாயகியாக நடித்தவர் அஞ்சனா ஜெயபிரகாஷ். துருவங்கள் பதினாறு படம் வெளியான நேரத்தில் எனக்கு பிடித்த நடிகர் மாதவன், பேவரிட் டைரக்டர் கெளதம்மேனன் என்று கூறி வந்தவர், முன்னணி நடிகர், டைரக்டர்களின் படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வெற்றி படத்தில் நடித்திருந்தபோதும் அஞ்சனாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில், ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற தனது கொள்கையை மாற்றி தற்போது செகண்ட் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராகி விட்டார் அஞ்சனா. அதோடு, விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தில் ஒரு குத்துப்பாடலில் அவருடன் நடனமாடுவதற்கும் சம்மதம் சொல்லியிருக்கும் அஞ்சனா, இனிமேல் கிடைக்கிற வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.