பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நான் அவனில்லை-2வைத் தொடர்ந்து செல்வா இயக்கி வரும் படம் வணங்காமுடி. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மாஜி ஹீரோயினி சிம்ரன், ரித்திகா சிங், அட்டகத்தி நந்திதா, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதைப்படி உயர்மட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அரவிந்தசாமியை துரத்தும் ஆபத்துக்கள்தான் இந்த படமாம்.
மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ரித்திகா சிங் நடிக்க, சிம்ரன் அவரது தோழியாக நடித்திருக்கிறார். மற்றபடி நந்திதா, சாந்தினி ஆகியோர் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கிறார்களாம். அந்தவகையில், நந்திதா மதுரை பெண்ணாகவும், சாந்தினி தூத்துக்குடி பெண்ணாகவும் நடிக்கிறார்களாம். அவர்களெல்லாம் எதற்காக அங்கிருந்து அரவிந்த்சாமியை தேடி வருகிறார்கள் என்பதுதான் கதையின் சஸ்பென்சாம்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள அரவிந்த்சாமி, பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடிக்க சென்று விட்ட நிலையில், தற்போது வணங்காமுடி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.