பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சில படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலளார்கள் அதிக சம்பளம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், இனி யாரை வைத்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பு பெப்சி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியததோடு கண்டனம் தெரிவித்தது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு பதிலாக நடிகர்களின் சம்பளத்தை குறைத்தாலே தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் செலவு குறையும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விஷால் கூறியதாவது.... "படப்பிடிப்பை நிறுத்த தயாரிப்பாளர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நடிகர்கள் யாரும் சம்பளத்தை அதிகாரமாக கேட்கவில்லை. நடிகர்களின் மார்கெட் உணர்ந்து தயாரிப்பாளர்கள் தருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் சினிமா தலைத்து நிற்கும். யார் வயிற்றிலும் அடிப்பது எங்கள் நோக்கம் இல்லை, இருந்தாலும் தயாரிப்பாளர்கள் நலனையும் பார்க்க வேண்டும். பெப்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்" என்றார்.