'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் வெளிவந்து ஐந்து காட்சிகளுக்குள் காணாமல் போனது. படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று உடனே கேட்காதீர்கள், அது சிம்புவுக்கும் தெரியாது, படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தெரியாது. தோல்விகளைச் சமாளிப்பது என்பது சிம்புவுக்கும் கைவந்த கலை தான். எதைப் பற்றியும் கவலைப்படாமல், அசராமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்.
இதனிடையே, சிம்புவின் அடுத்த படமாக அவர் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து நின்று போன 'கெட்டவன்' படம் வரும் என செய்திகள் வெளியாகின. ஆனால், அது பற்றியெல்லாம் செய்திகள் வருவது சிம்புவுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. இன்று காலை டுவிட்டரில் கொதித்தெழுந்துவிட்டார்.
“மீடியாக்களுக்கு அன்பான, தாழ்மையான வேண்டுகோள், என்னுடைய அடுத்த படம் பற்றி யூகத்தின் அடிப்படையில் எந்த செய்தியும் எழுதாதீர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், உங்கள் ஆதரவிற்கு நன்றி' என பதிவிட்டிருந்தார்.
சிம்புவின் அடுத்த படம் சொந்தப் படமாகத்தான் இருக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க யார் முன் வருவார்கள் என 'அஅஅ' படத்தின் படுதோல்விக்குப் பிறகு கோலிவுட்டில் அதிகமாகப் பேசப்பட்டது.