டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதுடில்லி: இந்து சர்கார் என்ற ஹிந்தி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, மறைந்த காங்., தலைவர் சஞ்சயின் மகள் எனக்கூறி வரும், பிரியா சிங், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த இந்திரா, பிரதமராக இருந்த போது, 1975 - 77ல், எமர்ஜென்சி எனப்படும், நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, இந்து சர்கார் என்ற திரைப்படத்தை, மதுர் பண்டார்கர் இயக்கி உள்ளார். இந்த படம், நாடு முழுவதும், நாளை வெளியாகிறது.
இதற்கிடையே, இந்திராவின் இரண்டாவது மகனான, மறைந்த சஞ்சயின் மகள் எனக்கூறி வரும், பிரியா சிங் பால், 48, இந்த படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரியா சிங் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள், அமித்தவ ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், படம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் படத்திற்கு தடைவிதிக்க மறுத்ததோடு பிரியா சிங் பாலின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இதன்மூலம் இந்து சர்கார் படக்குழுவிற்கு ஒரு பெரிய பிரச்னை நீங்கியுள்ளது. படம் நாளை திட்டமிட்டபிடி வெளியாக உள்ளது.