சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
தெலுங்குத் திரையுலகமே கதிகலங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தெலுங்கானா மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு தெலுங்குத் திரையுலகினரை போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரத்தில் விசாரித்து வருகிறது.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு, நடிகர்கள் தருண்குமார், சுப்பராஜ், நவ்தீப், நடிகை சார்மி ஆகியோர் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரி, நகம் உள்ளிட்டவைகள் விசாரணைக்கு பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்று நடிகை முமைத் கான் விசாரணைக் குழு முன் ஆஜர் ஆகியுள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து அனுமதி பெற்று அவர் வந்துள்ளார். திரும்பவும் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போவாரா என்பது விசாரணை முடிந்த பிறகே தெரியும்.
இதனிடையே, இந்த விவாகரம் ஆந்திரா, தெலுங்கானா மோதலாக மாறுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்படும் பலரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், திரையுலகத்தில் ஆந்திராவிலிருந்து வந்த பலரை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக சிலர் குற்றம் சாட்டி வருகிறார்களாம். அதனால், தெலுங்குத் திரையுலகத்தை ஐதராபாத்திலிருந்து, ஆந்திர மாநில நகரான விசாகப்பட்டிணத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.
தெலுங்கானா அரசாங்கம் வேண்டுமென்றே ஆந்திரத் திரையுலகினர் பெயரைக் கெடுக்கும் விதத்தில் நடந்து கொள்கிறது என்றும் சிலர் நினைக்கிறார்களாம். விசாரணை முடிவில் தான் இந்த விவகாரம் எப்படிப் போகும் என்று தெரிய வரும். அதுவரை இப்படியான சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது என்றே டோலிவுட்டில் பலர் கருதுகிறார்கள்.